ஆளுமை:நாகராசா, வைரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகராசா
தந்தை வைரமுத்து
தாய் நீலாத்தை
பிறப்பு 1960.07.10
இறப்பு -
ஊர் நெடியமடு,களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை வேட மதகுரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைரமுத்து நாகராசா (1960.07.10) நெடியமடு, களுவன்கேணி, மட்டக்களப்பைச் சேர்ந்த வேட மதகுரு ஆவார். இவரது தந்தை வைரமுத்து;தாய் நீலாத்தை. இவரது மனைவி தவமணி. இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் ஐந்து வரை களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். தனது தாயின் வழியில் வந்த மூன்றாவது தலைமுறையாக இவர் குறித்த சடங்கு மையத்தினை நடாத்தி வருகின்றார் தனது அம்மப்பாவான ‘கல்கொட்டா’ என்வரிடம் இருந்து இவர் சகல விடயங்களையினையும் கற்றுள்ளார். குறித்த கிராமத்தில் இன்று வரைக்கும் சகலவிதமான குணமாக்கல் நடவடிக்கைகளையும் எதுவித சன்மானமும் பெறாமல் நடாத்தி வருகின்றார். வேடர் மொழி எனும் போது அவர்தம் சடங்கு நடவடிக்கைகளில், அவர்களினால் கடவுளராகக் கருதப்படும் அனைத்துக் கடவுளருக்குமான அழைப்புப் பாடல்கள், மன்றாட்டு அழைப்புக்கள் என்பவற்றினை ஓரளவு வேட மொழியில் பாடக்கூடியவராகவும் காணப்படுகின்றார்.