ஆளுமை:நாகபூசணி, சோமசுந்தரக்குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகபூசணி, சோமசுந்தரக்குருக்கள்
பிறப்பு 1956.07.13
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகபூசணி, சோமசுந்தரக்குருக்கள் (1956.07.13 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். ஓவியத்துறையில் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டு விளங்கும் இவர், கோலக் கலைகள் பற்றிய பல கட்டுரைகளை கோலப் படங்களுடன் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் வெளிப்படுத்தியதோடு பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் 1977 இல் புளியம் பொக்கனை நாகதம்பிரான் ஆலயம், 1978 இல் காரைநகர் வைரவர் ஆலயம், 1987 இல் மாவிட்டபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலய வசந்த மண்டபம், 1994 இல் பளை கண்ணகை அம்மன் ஆலய வசந்த மண்டபம், 1966 இல் இருபாலை முத்துமாரி அம்மன் ஆலய வசந்த மண்டம் ஆகியவற்றிற்கான திரைச்சீலைகளை வரைந்துள்ளார்.

இவரது கலைத்திறமைக்காகச் சமுதாய மட்டத்தில் கலைமணிப் பட்டத்தைப் பெற்றுள்ளதோடு, 2005 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் கலைஞானச்சுடர் விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 196
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 252