ஆளுமை:நவரத்தினம், நா. வி. மு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவரத்தினம்
பிறப்பு 1950.06.27
ஊர் வண்ணார்பண்ணை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவரத்தினம், நா. வி. மு. (1950.06.27 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் சங்கீத பூஷணம், பண்ணிசை உயர் டிப்ளோமா, ஆசிரியர் டிப்ளோமா, இசை முதுதத்துவமாணி, இசைக் கலாநிதி, தெலுங்கு உயர் சான்றிதழ், ஆங்கில உயர் சான்றிதழ் ஆகிய பட்டச் சான்றிதழ்களை இந்தியாவிலும் இலங்கையிலும் பெற்றுள்ளார்.

இவர் 1981 ஆம் ஆண்டு முதல் வட இலங்கை சங்கீத சபைப் பாடத்திட்டத்தில் பண்ணிசையை ஒரு பாட அலகாக இணைப்பதற்காகச் செயலாற்றியதுடன் இசைக் கருத்தரங்குகளைக் கோப்பாய்க் கல்வி மூலவள நிலையம் ஊடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் இசைத் துறையின் முதலாவது சிரேஷ்ட விரிவுரையாளர் என்ற தரத்தைப் பெற்றதுடன் 1999 - 2004 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் சென்னை மாநில ஆளுனர் விருது, இலங்கைத் தேசிய விருதான ஞானசிரோன்மணி விருது , இசைஜோதி விருது, சாகித்திய இசைப் பேரரசு விருது ஆகிய பல விருதுகளைப் பெற்றுள்ளதோடு 2008 ஆம் ஆண்டு நல்லூர் கலாச்சாரப் பேரவையினால் கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 119
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 73