ஆளுமை:நந்தினி, சிவராஜன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நந்தினி, சிவராஜன்
பிறப்பு 1959
ஊர் உடுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நந்தினி, சிவராஜன் (1959 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் கே. லக்‌ஷ்மணன், ஏரம்பு சுப்பையா, ந. வீரமணிஐயர் ஆகியோரிடம் பரதநாட்டியம், நாடகம் ஆகிய கலைகளைக் கற்று 1997 ஆம் ஆண்டு முதல் நடனத்துறையில் பங்காற்றி வந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியில் நடன ஆசிரியராகவும் கலைத்துறையில் சகல பரீட்சைகளில் பரீட்சகராகவும் கலைநிகழ்வுகளில் நடுவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் மாணவரிடையே கலைகளை வளர்த்தல், பிரதேச ரீதியாகக் கலைகளை வளர்த்தல், பரதகலாநிவேதன் நாட்டியாலயம் ஊடாகக் கலை அபிவிருத்திப் பணி செய்தல், வட இலங்கை சங்கீத சபையின் ஊடாகக் கலைகளை வளர்த்தல், அகில இலங்கை ரீதியில் தேசிய மட்டக் கலை நிகழ்வுக்கு மாணவர்களைப் பயிற்றுவித்து வெற்றி பெறச் செய்தல் ஆகிய பணிகளை ஆற்றியுள்ளார்.

இவர் பரதசூடாமணி என்னும் பட்டத்தை அடையாறு சென்னையிலும் பரதகலா வித்தகர் பட்டத்தை வட இலங்கை சங்கீத சபையாலும் ஜனாதிபதியால் வித்தியாகீர்த்தி ஶ்ரீசமன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 229