ஆளுமை:நடராசா, செல்லப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை செல்லப்பா
பிறப்பு 1930.05.10
இறப்பு 2013.07.08
ஊர் கோண்டாவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, செல்லப்பா (1930.05.10 - 2013.07.08) யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை செல்லப்பா. இவர் 1947 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் ஈடுபட்டு வந்தார்.

இவர் 1954 ஆம் ஆண்டு கொழும்பு ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனமான தினகரன் அலுவலகப் பத்திரிகையாளராகத் தனது பணியைத் தொடங்கினார். இக்காலத்தில் கட்டுரைகள், செய்திகள், விமர்சனங்கள், வர்ணனைகள் எழுதுவதில் தனது திறமைகளைக் காட்டி லேக்ஹவுஸ் ஆசிரியர் குழுவில் பல பரிசில்களை வென்றார். பின்னர் 1961 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை இலங்கைப் பாராளுமன்றத்தில் அறிக்கையாளராக, சிரேஷ்ட அறிக்கையாளராகச் சேவைபுரிந்து 1989 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் நடைமுறைகள் பற்றி எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம் என்னும் நூலாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1986 ஆம் ஆண்டு பத்தாவது தடவையாக வெளியிட்டது. இவர் 1988 ஆம் ஆண்டு அகில இலங்கைச் சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டார். இவருக்கு இவரது இலங்கைப் பாராளுமன்றம் என்ற நூலுக்காக இலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் இரண்டு தங்கப் பதக்கங்கள் அணிவித்துக் கௌரவித்தது. இவர் பல கோவில்களின் கும்பாபிஷேக மலர்களை எழுதி வெளியிட்டுத் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 16
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 34