ஆளுமை:நடராசா, இராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை இராமலிங்கம்
பிறப்பு 1926.12.01
இறப்பு 2006
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, இராமலிங்கம் (1926.12.01 - 2006) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை இராமலிங்கம். இவர் ஆரம்பக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் கற்றார். இவர் பாடசாலைக் காலத்தில் பல சமய, சங்கீத, பண்ணிசைப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றவர். இவர் சிதம்பரம், ஆ.இராசப்பிள்ளை, பரமேஸ்வர ஐயர் ஆகியோரிடம் ஆரம்ப இசைப் பயிற்சியைப் பெற்றுப் பின்னர் மேற்படிப்புக்காக இந்தியா சென்று சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து இசைப் பயிற்சியைப் பெற்று, பல்கலைக்கழகத் தலைவராக இருந்த சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளையிடம் குருகுல முறையில் இசையைக் கற்றுக் கொண்டார். அங்கு சங்கீத பூஷணம் பட்டம் பெற்று இலங்கை வந்த இவர், தனது முதலாவது இசைக் கச்சேரியை யாழ்ப்பாணம் ரசிகரஞ்சன சபாவில் 1951 ஆம் ஆண்டு நிகழ்த்தினார்.

இவர் ஈழத்தின் பல பாகங்களிலுமுள்ள அரச பாடசாலைகளில் இசையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று 1982 ஆம் ஆண்டு அரசினால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விபுலானந்தர் இசைக் கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்று 1982 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இவர் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இசைப்பணி ஆற்றியுள்ளார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலைக்கழகம் ஆகியவற்றின் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றியதுடன் 1993 ஆம் ஆண்டு அகில இலங்கைக் கம்பன் கழகம் இசைப் பேரறிஞர் என்னும் விருது வழங்கி கௌரவித்துள்ளது. அத்தோடு இவருக்கு 1987 ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரை குரலிசை பூஷணம் என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார். இவருக்கு நல்லூர் கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 87