ஆளுமை:சுப்பிரமணியம், வே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
பிறப்பு 1933.05.03
ஊர் முள்ளியவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வே. (1933.05.03 - ) முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முல்லைமணி என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர், 2005 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் (முனைவர்) பட்டத்தையும் பெற்றுள்ளதோடு ஆசிரியராகவும் அதிபராகவும் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் கொத்தணி அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரியாகவும் மாவட்டக் கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தணியாத தாகம், மல்லிகைவனம், வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை, கொண்டு வந்த சீதனம், வன்னியர் திலகம், முகஞ்சோலை, இலக்கியப்பார்வை, வன்னியியற் சிந்தனை, தமிழ்மொழிப் பயிற்சி ஆகியன இவரது படைப்புக்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 247 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 397 பக்கங்கள் 14
  • நூலக எண்: 2030 பக்கங்கள் 20-21
  • நூலக எண்: 2080 பக்கங்கள் 04-06