ஆளுமை:சுந்தரலிங்கம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரலிங்கம்
தந்தை கந்தையா
பிறப்பு 1943.03.27
ஊர் ஆனைக்கோட்டை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், கந்தையா (1943.03.27 - ) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை கந்தையா. இவர் பிரபல ஓவியரான பெனடிக்றிடம் ஓவியத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டதோடு கல்வி, கலை, கலாச்சாரக் கழகத்தில் 1970 ஆம் ஆண்டில் இணைந்து மூன்று வருடங்கள் பயின்றார். இவர் முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மரபுவழி ஓவியத்துறையில் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.

இவர் யாழ்ப்பாண மாவட்டத்திலிருக்கும் சைவ ஆலயங்களில் தெய்வங்களின் ஓவிய வடிவங்கள், வரலாற்று ரீதியான புராண கதைகளுக்காக ஓவியங்கள், திரைச்சீலைகள் எனப் பலவகை ஓவியங்களை வரைந்துள்ளார். யாழ்ப்பாணம், மாத்தளை, கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள பல சைவாலயங்களில் இவரது ஓவியக்கலை வண்ணத்தை நிறைவுறக் காணலாம்.

வர்ணக் கலையரசு, வர்ணக் கலாரூபன், ஓவியமாமணி, சித்திரசிகாமணி, கலாரத்னா, வர்ணக் கலைவேந்தன், சித்திரக் கலைஞானி, சித்திரக் கலாநிதி, ஓவியவாருதி, சித்திரக் கலாசூரி, சைவாலயவர்ணச் சக்ரவர்த்தி, ஓவியக் கலையரசன் எனப் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான இவருக்கு, வடக்கு அபிவிருத்திப் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சும் 2001 ஆம் ஆண்டு கலைஞான கேசரி என்னும் பட்டத்தையும் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருதையும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 191
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 246-247