ஆளுமை:சிவராசா, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராசா
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1949.10.11
ஊர் நாவற்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா, சுப்பிரமணியம் (1949.10.11 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம். இரசாயன விஞ்ஞானத்தில் டிப்ளோமாத் தகைமை பெற்ற இவர், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பீடத்தில் தொழில் நுட்பவியலாளராகப் பணிபுரிந்த வேளையில் 1989 ஆம் ஆண்டு கண்பார்வை பாதிப்புக்குள்ளானமையால் கைதடி வலுவற்றோர் பாடசாலையில் சேர்ந்து சு. வேலுப்பிள்ளை, புலவர் கார்த்திகேசு, இ. ஜெயராஜ் ஆகியோரிடம் தமிழ்மொழி, சமயம் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.

இவர் நாடகம், சிறுகதை, நாவல்கள், சிறுவர் இலக்கியம், சமயம், பேச்சு ஆகிய துறைகளில் ஆற்றல் கொண்டவர். இவர் முடிவில்லாத ஆரம்பம், முல்லைப் பூக்கள், Blessed Paradise, வண்ண மலர்கள், மகாபாரதக் கதை, Fun and Friendly English, காதவாய்க்கால், கருணை வெள்ளம், திருத்தமிழ் கதைகள், தொல்லையிலும் பிறவி, ஆகாயத் தாமரை ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகச் சங்கீத நாட்டிய சங்கம் 1998- 1999 ஆம் ஆண்டில் நடாத்திய கீதம் இலக்கியப் போட்டியில் சிறுகதையில் மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ளதோடு எழுத்துத்துறையில் பல சான்றிதழ்களையும், பரிசில்களையும் பெற்றுள்ளார். புராணபடன நிகழ்வுகளில் பங்குபற்றி வரும் இவரது சேவையைப் பாராட்டி 2006 ஆம் ஆண்டு சத்தியரூபக் கவியுரையாசிரியர் பட்டம் வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 172