ஆளுமை:சிவபாலன், வைரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாலன்
தந்தை வைரமுத்து
பிறப்பு 1948.05.22
ஊர் சங்கானை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலன், வைரமுத்து (1948.05.22 - ) யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வைரமுத்து. தனது ஆரம்பக் கல்வியைச் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியிலும் க. பொ. த. சாதாரணம் வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்ற இவர், தனது 1 3ஆவது வயதில் மு. சிவானந்தனின் மூலம் கோவலன் நாடகத்தில் கோவலனாக வேடமேற்று நடித்ததன் மூலம் தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.

இவர் 1979 ஆம் ஆண்டில் நல்லை நகர் நாவலர் நூற்றாண்டு விழாவில் திரு. தார்சீசியஸ் அவர்களின் இயக்கத்தில் நல்லை நகர் நாவலர், திரு ஏ. ரகுநாதனின் இயக்கத்தில் தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம், திரு. அரியாலை நடராசன் இயக்கத்தில் தாலி மேல் ஆணை, திரு. சக்ரவர்த்தி இராசலிங்கத்தின் இயக்கத்தில் முள்ளும் மலரும், மனம் திறந்த போது ஆகிய நாடகங்களில் நடித்துத் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். மேலும் செங்கை ஆழியனின் வாடைக்காற்று திரைப்படத்தில் சம்மாட்டி பாத்திரத்திலும் இலங்கையின் முதல் சினிமா ஸ்கோப் திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு திரைப்படத்தில் தவில் வித்துவானாகவும் லெனின் மொறாயஸின் இயக்கத்தில் தயாரான நெஞ்சுக்குத் தெரியும் திரைப்படத்தில் பிரதம வில்லன் பாத்திரத்திலும் மேலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது கலைத் திறமைக்காக 1992 ஆம் ஆண்டில் லயன்ஸ் கழகம் தென்மராட்சிப் பெருமான் என்ற பட்டத்தையும் 2006 இல் வலிகாமம் மேற்குக் கலாச்சாரப் பேரவை கலைவாருதி என்ற பட்டத்தையும் இவருக்கு அளித்துக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 163-164