ஆளுமை:சிவபாதசுந்தரனார், சுப்பிரமணியபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதசுந்தரனார்
தந்தை சுப்பிரமணியபிள்ளை
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1918.01.17
இறப்பு 1953.08.14
ஊர் எழுத்தாளர்.
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதசுந்தரனார், சுப்பிரமணியபிள்ளை (1918.01.17 - 1953.08.14) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை; தாய் வள்ளியம்மை. புலோலி வேலாயுதம் பாடசாலையில் கல்வி கற்ற இவர், மகாராஜாக் கல்லூரியில் எப். ஏ. (F.A) வகுப்பில் சித்தி பெற்றதோடு சென். யோசப் கல்லூரியில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் புலோலி வேலாயுதம் பாடசாலை, கொழும்பு பொன்னம்பலம் பள்ளி ஆகியவற்றில் ஆசிரியராகவும் திருகோணமலை சென். ஜோசப் கல்லூரியில் தலைமை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் முதலாம், இரண்டாம், மூன்றாம் சைவ போதங்கள், திருவருட்பயன் உரை, திருக்குறள் மணிகள், சுப்பிரமணியப் பெருமானுடைய திருப்பெருவடிவம், சைவக் கிரியை விளக்கம், கந்தபுராண விளக்கம், அகநூல், அளவைநூல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 19-24