ஆளுமை:சிவஞானசுந்தரம், த.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஞானசுந்தரம்
பிறப்பு 1915.09.06
இறப்பு 1961.10.14
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஞானசுந்தரம், த. (1915.09.06 - 1961.10.14) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் இலங்கையர்கோன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். இவர் தனது பதினெட்டாவது வயதில் எழுதிய முதல் சிறுகதையான ' மரிய மதலேனா' 1938 ஆம் ஆண்டில் கலைமகள் இதழில் வெளியாகியது. தொடர்ந்து கடற்கோட்டை, சிகிரியா, அனுலா, மணப்பரிசு, யாழ்பாடி ஆகிய கதைகளைக் கலைமகளில் எழுதினார். ஈழகேசரியில் துறவியின் துறவு, ஒரு நாள், தாய், ஓரிரவு, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல் ஆகிய சிறுகதைகளையும் பாரததேவி இதழில் முதற் சம்பளம், வஞ்சம் போன்ற பல கதைகளையும் எழுதினார்.

இவர் விதானையார் வீட்டில், கொழும்பிலே கந்தையா, லண்டன் கந்தையா ஆகிய நாடகங்களையும் வெள்ளிப்பாதசரம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் மாதவி மடந்தை என்ற மேடை நாடகத்தையும் மிஸ்டர் குகதாசன் என்ற நகைச்சுவை நாடகத்தையும் முதற்காதல் என்ற மொழிபெயர்ப்பு நூலையும் வெளியிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 44-46
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 47
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 14-18