ஆளுமை:சரவணமுத்து, ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்து
பிறப்பு 1915
இறப்பு 2009.10.29
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்து, ச. (1915 - 2009.10.29) வானொலிக் கலைஞர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒருவர். "வானொலி மாமா" என்று அழைக்கப்பட்டார். இவர் சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இவர் ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றினார்.

இவர் இலங்கையர்கோனின் "விதானையார் வீடு" நாடகத்தில் நடித்திருந்ததார். கலைத்துறையிலும் சமய, சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். இவர் திருக்கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளர், கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவர் பதவி வகித்ததுடன் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 1966 - 2000 ஆண்டு வரை அங்கத்தவராகவும் பின்னர் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் பதவியும் வகித்தார்.

இவரது சேவைக்காக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்தாபக தின விழாவில் “சங்கச் சான்றோர் - 2006’ விருது அளித்துக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 144-146
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணமுத்து,_ச.&oldid=197171" இருந்து மீள்விக்கப்பட்டது