ஆளுமை:சந்திரசேகரன், தனவந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரசேகரன்
தந்தை தனவந்தன்
தாய் சின்னம்மாள்
பிறப்பு 1971.08.21
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரசேகரன், தனவந்தன் (1971.08.21 - ) வவுனியா, சின்னப் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும் தென்னிந்தியா, திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். இவரது தந்தை தனவந்தன்; தாய் சின்னம்மாள். ஆரம்பக்கல்வியை கோவில் புதுக்குளம் சிரிமா வித்தியாலயத்தில் (தரம் -04 வரை) கற்றார்.

1990 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து வெளிவரும் ‘புதிய தோணி’ சஞ்சிகையில் இவரது கன்னிக்கவிதையான ‘காகிதக் கப்பல்’ பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நந்தவனம் சந்திரசேகரன் என்னும் புனைபெயரில் 500 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 400 இற்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகள், 50 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், 1000 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இனியநந்தவனம் என்னும் கலை - இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். இவர் சிற்றிதழ்செம்மல் விருது, சிறந்த சிற்றிதழ் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 84-89

வெளி இணைப்புக்கள்