ஆளுமை:மணிமேகலாதேவி, கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 14 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மணிமேகலாதேவி
தந்தை கார்த்திகேசு
தாய் தங்கநாச்சியார்
பிறப்பு 1936.11.29
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மணிமேகலாதேவி, கார்த்திகேசு திருகோணமலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் தங்கநாச்சியார். இவர் நான்காவது புதல்வியாவார். ஆரம்பக் கல்வி தொடக்கம் இடைநிலைக் கல்வி வரை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, உயர்தரம் இலண்டன் A/L யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி கற்றார். தான் கற்ற பாடசாலையிலேயே ஆசிரியர் பணியில் 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஈடுபட்டு வந்துள்ளார். இக்காலகட்டத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் மணிமேகாதேவி. ஆசிரியராகக் கடமையாற்றும் போது பாடசாலை கலைநிகழ்ச்சிகளுக்கு நடனத்திற்கான பாட்டுகள், நாட்டிய நாடகத்திற்கான பாடல்களை எழுதி வந்துள்ளார்.

ஓய்வு பெற்ற பின்னரே நூல்களை எழுத ஆரம்பித்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்த சைவ ஆசிரியர் கலாசாலையில் தமிழ் ஆசிரியராகப் பயிற்சி பெற்ற மணிமேகலாதேவி திருகோணமலையில் இரத்தினகான சபையில் கர்நாடக இசையைக் கற்று சங்கீத ஆசிரியராக பட்டம் பெற்றவர்.1991ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீதச் சபையின் வைர விழாவின் போது சங்கீத கலாவித்தகர் எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு திருவூஞ்சல், தேர்ச்சிந்து, திருபள்ளி எழுச்சி, போன்ற பிரபந்தங்களைப் பாடி அளித்துள்ளார். அவை இன்றும் அவ்வாலயங்களில் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது பக்தி பாமாலை பாகம் – 1 1999ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட ஆலயங்கள் பற்றிய கீர்த்தனைகள், திருகோணநாதர் திருவந்தாதியும் இதில் அடங்கியுள்ளது. இந்த நூலே திருகோணமலையில் முதல் முதலாக வெளியிடப்பட்ட தமிழ் கீர்த்தனை நூலென குறப்பிடுகிறார் எழுத்தாளர். இந்த நூலுக்கு இந்து கலாசார அமைச்சு இவரைப் பாராட்டி பரிசும் வழங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டு இந்த நூல் எழுதியமைக்காக எழுத்தாளருக்கு கலாபூஷணம் விருது கிடைத்துள்ளது.

திருகோணமலையில் திருமுறைப் பண்ணிசையை வளர்க்கும் நோக்கில் மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய முறையில் சங்கீத திருமுறை பண்ணிசை விளக்கம் என்ற நூலை 2005ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். 2011ஆம் ஆண்டு திருகோணமலையின் இசை பாரம்பரியம் என்ற ஒரு ஆய்வு நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு திருமுறை பண்ணிசை தரம் நான்கிற்கு உரிய நூலையும், பக்தி பாமாலை பாகம் இரண்டையும் வெளியிட்டுள்ளார். 2006ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் இயங்கும் அருள்மிகு முத்துக்குமாரசாமி கோவில் தேவஸ்தான இசை நடன கலாலயத்தில் பண்ணிசை கற்பிக்கும் ஆசிரியராக இணைந்து இன்று வரை சேவையாற்றி வருகிறார். 35 வருடங்களுக்கு மேலாக தமிழ்த்தினப் போட்டிகளுக்கும் திருமுறைப் பண்ணிசை போட்டிகளுக்கும் நடுவர்களின் தலைவராக கடமையாற்றி வந்துள்ளார். 2009ஆம் ஆண்டு திருகோணமலை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலைவிழாவில் தமிழ் கலைஞர் என்று பாராட்டி கௌரவிக்கப்பட்டார். ஆசிரியர்களின் கலைச்சேவையை பாராட்டி கௌரவிக்கு முகமாக பாடசாலைகளும், சமய நிறுவனங்களும் இவரை பாராட்டி கௌரவித்துள்ளன. ஸ்ரீசண்முகா மகளிர் கல்லூரியின் மகுடம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களின் கும்பாபிஷேக மலர்களில் இவரின் கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்துள்ளன. இசை, கலை இலக்கியம் சம்மந்தமான பழைய நூல்களை சேகரி்த்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றார் எழுத்தாளர்.

குறிப்பு : மேற்படி பதிவு மணிமேகலாதேவி, கார்த்திகேசு அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்