ஆளுமை:பீதாம்பரம், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:03, 13 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீதாம்பரம்
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1943.04.24
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீதாம்பரம், கர்த்திகேசு (1943.04.24 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்ற இவர், பின்னர் அரச சேவையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் பணியாற்றும் காலத்தில் தான் இடம்மாற்றலாகிச் சென்ற மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் தன் கலை ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் புராண, சரித்திர, சமூக சீர்திருத்த நகைச்சுவை நாடகங்களில் நடித்ததோடு இருபத்தெட்டு நாடகங்கள் வரையில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். 1951 ஆம் ஆண்டிலிருந்து நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர், நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 163
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 198