ஆளுமை:ஞானராசா, சுகிலா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:41, 10 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படைப்புகள்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுகிலா
தந்தை துரைராசா
தாய் ஞானேஸ்வரி
பிறப்பு 1963.04.01
ஊர் மட்டக்களப்பு
வகை சிறுவர் இலக்கியவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானராசா, சுகிலா (1963.04.01) மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிறந்தவர் எழுத்தாளர். இவரது தந்தை துரைராசா; தாய் ஞானேஸ்வரி. எழுத்தாளர் சுகிலாவின் கணவர் ஞானராசாவும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கல்வியை ஓட்டமாவடி மகாவித்தியாலயத்திலும் இடைநிலை கல்வியை வாழைச்சேனை மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை திருகோணமலை ஸ்ரீ சண்முகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். தேசிய கல்வி நிறுவனத்தில் கல்விமாணி பட்டம் பெற்றுள்ளார். 1988ஆம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் காலடி எடுத்து வைத்து 2009ஆம் ஆண்டு அதிபராக பதவி உயர்வு பெற்றார். வில்லூண்டி சனசமூக நிலைய தலைவராகவும் உள்ளார். எழுத்தாளர் தனது 16ஆவது வயதில் எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இவரின் சிறுவர் இலக்கிய நூலான சின்னச்சிட்டுக்குருவி கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் 2010ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இளைஞர், முதியோர் ஆகியோருக்கு பொருந்தக்கூடிய படைப்புக்களை படைக்க எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு ஞானராசா, சுகிலா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • சின்னச்சிட்டுக்குருவி

வளங்கள்

  • நூலக எண்: 15521 பக்கங்கள் 04-10
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஞானராசா,_சுகிலா&oldid=291447" இருந்து மீள்விக்கப்பட்டது