பேச்சு:வரலாற்றுத் திருக்கோணமலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:53, 25 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" == நூல்விபரம்== இந்நூலில் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இந்நூலில் திருக்கோணமலை வரலாறு போர்த்துக்கீசரது வருகை வரை ஆராயப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வரம் போன்றே திருக்கோணமலைத் தமிழ்மக்களின் வரலாறும் கிறிஸ்து காலத்திற்கு முன்பிருந்தே ஆரம்பித்திருக்கின்றது என்பதை இந்நூல் ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகின்றது. திருகோணமலை வரலாற்றுடன் தொடர்பான தமிழக வரலாற்றுப் பின்னணிகளும் விரிவாக இங்கு ஆராயப்பட்டுள்ளன. தாயகத்திலிருந்து தற்போது ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் நூலாசிரியர் இந்நூலுக்காக பல்வேறு சர்வதேச ஆவணக்காப்பகங்களிலிருந்தும் தேடிப்பெற்ற பல சாசனங்களிலிருந்தும், வரலாற்று நூல்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.


பதிப்பு விபரம் வரலாற்றுத் திருகோணமலை. கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346 அன்புவழிபுரம், 1வது பதிப்பு. மே 2003. (சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3, மெய்கை விநாயகர் தெரு, வடபழநி). 272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22 * 14 சமீ.

-நூல் தேட்டம் (# 1978)