பகுப்பு:தமிழ்நயம்

From நூலகம்

தமிழ் நயம் சஞ்சிகை கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் கொழும்பு றோயல் கல்லூரியில் இடம் பெற்ற தமிழ் கலசாரக் கலை விழாவின் விளைவாகவே இவ்விதழானது தோற்றம் கண்டுள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக கல்லூரி மாணவர் V. அரவிந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது சங்கத் தமிழர் தம் சிறப்பையும், தமிழால் வளம் பெற்ற தமிழர் தம் வாழ்வின் வனப்பையும் எழுத்திலே படைக்கும் நோக்கிலே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் கலை, இலக்கிய, சமூகம் தொடர்பான மாணவர்களது படைப்புகளே அதிகமாக இதில் வெளிவருகிறது.