பகுப்பு:அஞ்சலி (பருத்தித்துறை)

From நூலகம்

இதுவொரு உளசமூக ஆன்மீக இலக்கிய இதழாகும். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அஞ்சலியகத்தினரால் கடந்த 2007 ஆண்டில் இருந்து இவ்விதழானது வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக அருட்தந்தை சூ. டேமியன் அவர்கள் இருந்துள்ளார். இதனை பருத்தித்துரை அஞ்சலியகத்தினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு காலாண்டு இதழாகவே வெளிவந்துள்ளது. இதன் உள்ளடக்கங்களாக உளவளம், ஆன்மிகம், கலை, கலாசாரம், வரலாறு, தொழினுட்பம், விஞ்ஞானம் முதலான பல்சுவை விடயங்கள் கட்டுரை, கவிதை, குறிப்புக்கள், அனுபவப்பகிர்வுகள் முதாலான இலக்கிய வடிவங்களாக வெளியிடப்படுகின்றன.