நிறுவனம்:கிளி/ அழகாபுரி மகா வித்தியாலயம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ அழகாபுரி மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் அழகாபுரி
முகவரி இராமனாதபுரம், கிளிநொச்சி
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் என்னும் கிராமசேவகர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதியான அழகாபுரி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளதே கிளி/அழகாபுரி வித்தியாலமாகும். இது 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட ஒரு ஆரம்பப் பாடசாலையாக விளங்குகின்றது. இதனுடைய ஆரம்ப வரலாற்றினை எடுத்து நோக்குகின்ற பொழுது இங்கு 1996ஆம் ஆண்டு நாட்டின் போர்ச்சூழல் காரணமாக கிளி/பன்னக்கண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையானது இடம்பெயர்ந்து வந்து தனது கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாத நிலையில் இருந்த சூழ்நிலையில் இங்கு பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டிய தேவையை உணர்ந்து கொண்ட கரைச்சிக்கோட்டக்கல்வி அலுவலர் திரு.க.வைரமுத்து அவர்களும் திரு. பூராசா மற்றும் கல்வி அலுவலர்களும் இணைந்து தற்பொழுது இப் பாடசாலை அமைந்துள்ள காணியை அக்காணி உரிமையாளரான பரோபகாரி திருமதி.மாணிக்கம் வள்ளிப்பிள்ளை அவர்களிடம் அணுகி இவ்விடத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பித்து அயலில் உள்ள சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவவேண்டும் என கேட்டுக்கொண்டதற்கிணங்க இப் பகுதியில் பாடசாலையை அமைப்பதற்கான இடத்தினை அவர்கள் அப்பொழுது பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து இப் பகுதியில் கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை தனது கல்விப் பணியினை தொடர்ந்தது. இதன் பொழுது அயலில் உள்ள மாணவர்களும் இப் பாடசாலையில் இணைந்து தமது கல்வியை ஆரம்பித்தனர். சிறிது காலப்பகுதிக்குப் பின்னர் கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையானது மீண்டும் தனது சொந்த இடத்திற்கு சென்றமையால் இப் பகுதி மாணவர்களின் கல்வியில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு இங்கு புதியதோர் ஆரம்பப் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்குடன் திரு.சுப்பிரமணியம் நடராசா அவர்களால் 2002.01.01 ஆம் திகதி அன்று கிளி/அழகாபுரி வித்தியாலயம் என்னும் பெயரில் இப்பாடசாலையை ஆரம்பித்து இப்பாடசாலையின் முதல் அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

இப்பாடசாலையின் அயற்சூழலில் உள்ளோர் பெரும்பாலும் 1987, 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் தீவகத்திலிருந்தும் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்தும் புலம்பெயர்ந்து இங்கு குடியேறிய மக்களாகவே விளங்குகின்றனர். இவர்கள் சாதாரண கூலித்தொழிலில் ஈடுபடும் மக்களாகும். இம் மக்களின் அடிப்படைக் கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையில் கல்வி சமூகத்தினர் எடுத்த முயற்சியின் பயனாக ஆரம்பத்தில் களிமண்ணால் கட்டப்பட்ட சுவரையும் ஓலைக்கூரையைக் கொண்டதுமான 20x80 கொண்ட தற்காலிக கொட்டகையிலே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தளபாட வசதிகள் மற்றும் பௌதிக வளங்கள் ஏதுமற்ற நிலையில் அதிபரினதும் ஆசிரியர்களினதும் அர்ப்பணிப்புடனான சேவையினால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. 120 மாணவர்களும் 3 ஆசிரியர்களும், 2 தொண்டராசிரியர்களும் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். 2004 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி உதவியுடன் 50x20 கொண்ட ஒரு நிரந்தரக்கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன் பின்னர் 2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் இடம்பெற்ற மிக உக்கிரமான போர்ச்சூழல் காரணமாக இப்பாடசாலையில் 450 மாணவர்களுக்குமேல் இடம்பெயர்ந்த மாணவர்கள் அதிகளவில் சேர்ந்தனர். எனினும் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் புலம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இப்பாடசாலையும் முற்றாக அழிந்தது. இதன் பின்னர் யுத்த நடவடிக்கைகள் முடிவடைந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் பின்னர் 2010.04.06ஆம் திகதி இப்பாடசாலை மீளவும் சொந்த இடத்தில் செயற்பட ஆரம்பித்தது. 2013 ஆம் ஆண்டில் யுனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் 90x20 அரை நிரந்தரக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிறுவனத்தின் உதவியுடனும், அரச உதவியுடனும் தளபாட வசதிகள் ஓரளவு திருப்தியான நிலையிலுள்ளன. இந்நிலையில் 2015.07.03 ஆம் திகதி அதிபர் திரு.சுப்பிரமணியம் நடராசா அவர்களின் இடமாற்றத்தின் பின்னர் 2015.07.03 – 2016.12.31 வரையான காலப்பகுதியில் திரு. நடராசா சண்முகலிங்கம் அவர்கள் கடமையைப் பொறுப்பேற்று செயற்படுத்தி வரும் வேளையில் திரு.சின்னத்துரை இளங்குமார் அவர்கள் 2017.01.01ல் அதிபராக நியமிக்கப்பட்டார். இவ்வாறாக இவ் அதிபரின் தலைமையில் இன்றுவரை மிகச்சிறப்பாக இயங்கிவரும் இப் பாடாசாலையில் 2017 ஆவணி மாதம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் செல்வி. கோநிலா கணேசலிங்கம் 159 புள்ளிகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அடுத்து 2018ல் செல்வி.ஜெ.அபிராமி 159 புள்ளிகளையும் பெற்று பாடசாலையின் பெயர் விளங்க வைத்தார.; தொடர்ந்து 2019ல் செல்வி. த. தர்சினி 152 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் செல்வன். தயாளன். வானுஜன் விசேட தேவையுடையோர் பட்டியிலில் உதவித் தொகை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறாக மாணவர்களின் கல்விமட்டம் மேம்பட்டு விளங்குவதுடன் ஏனைய இதர செயற்பாடுகளிலும் முன்னனி வகிப்பதனை அவதானிக்க முடிகின்றது. 2016ல் திருநெறிக்களகப் போட்டியில் மாவட்ட மட்டத்தில் பு.சமர்மதி முதல் இடத்தினையும் 2017ல் சிறுவர் நாடகப் போட்டியில் வலயமட்டத்தில் முதல் இடத்தினையும், ஆங்கிலக் குழுப்பாடலில் வலய மட்டத்தில் முதல் நிலை பிரிவு – ஐ மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் , முதல்நிலை பிரிவு-ii மாணவர்கள் மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து 2018இல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் த. தர்சினி இரண்டாம் இடத்தினையும் வி. அம்சிகா மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். இதே போன்று 2019இல் சு. சுஜந்தா கூட்டுறவு அபிவிருத்தி தினைக்கள ஓவியப் போட்டியில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக கல்வி, கலை, விளையாட்டு போன்ற அனைத்து விடயங்களிலும் இப் பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டம் சராசரி நிலையிலிருந்து தற்போது மேம்பட்டு வருவதுடன் .2020ம் ஆண்டு இடம் பெற்ற தரம்05 ஐந்து புரமைப் பரீட்சை பரிட்சையில் 81% (வீதமான) மாணவர்கள் 70 புள்ளிக்குமேல் பெற்றமை பாடசாலையின் வளர்ச்சிப் போக்கினை எடுத்து காட்டுகிறது.பிள்ளை நேயச் செயற்பாடுகளும் அதிகளவில் இடம் பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 பரீட்சையில் செல்வி.கிருஸ்னவேல் தரணிகா 158 புள்ளியைப் பெற்று சித்தியடைந்ததுடன்.2022 ஆம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரீட்சையில் செல்வன் ரா. யதுசிகன் 156 புள்ளிகளையும் செல்வன் க.தரணியன் 144 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர் மற்றும் 2022 ஆம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் திறன்போட்டியில் பங்குபற்றிய தரம் 05 மாணவர்கள கோட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று இப் பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.