நிறுவனம்:அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:14, 3 ஜனவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு
வகை பெண்கள் நிறுவனம்
நாடு இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
ஊர்
முகவரி 4/1 தோமஸ் லேன் மட்டக்களப்பு
தொலைபேசி 06522 26457 , 06522 23297
மின்னஞ்சல்
வலைத்தளம்


2005ஆம் ஆண்டு தை மாதம் 12ஆம் திகதி சுனாமிக்குப் பின்னர் பெண்களுக்கு உரிமைகளும் தனித்துவமான பெண்ணிலை நோக்கத்துடன் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு இதுவாகும். இது மட்டக்களப்பில் சூர்யா எனும் நிறுவனத்தை செயலகமாக கொண்டு இயங்கி வருகிறது. இது 15 நிறுவனங்களையும் 24 தனி நபர்களையும் அங்கத்தவர்களாக தன்னிடத்தே கொண்டுள்ளது. தற்பொழுது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கி செயற்பட்டுக் கொண்டு இருப்பினும் ஏனைய மாவட்டங்களின் தொடர்புடன் செயற்பட்டு வருகின்றது. இதன் அங்கத்துவ நிறுவனமாக சூர்யாவது உழைக்கும் மகளிர், அபிவ பெண்கள் அபிவிருத்தி நிலையம், தேவை நாடும் மகளிர், பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம், சமூக அமைப்பு, கிராம மக்கள் அமைப்புகளும், மனித உரிமை அமைப்பினர் நிறுவனம், மக்கள் நலன்புரி நிறுவனம் வாழைச்சேனை போன்றனவும் தனி நபர்களாக சிவனேசன், பிரேமதாசா சித்திரலோக மௌனகுரு, ஜெயந்தி ராஜலட்சுமி, இமானுவேல், கார்த்திகா, ராகினி, கவிதா, வசந்தி கமலா வாசுகி ஜெயசங்கர் என்பவருடன் காணப்படுகின்ற நிறுவனத்தின் நோக்கங்களாக நீதியை நோக்கிய பயணம் புதிய அரசியல் குழு அறிக்கைகளை வாசித்தல் கருத்தியல் தொடர்பான பாடத்திட்டம், பெண்கள் காப்பகம், அரசியல் அங்கத்துவம், சர்வதேச மகளிர் தினம் நிறுவனத்தின் செயற்பாடுகளாக பரிந்துரையும் பெற புரிதலும், 16 நாள் செயல்வாதம் பெண்கள் பிரச்சினை பதிவு செய்தல், ஆவணங்களை நகர்த்தி அரசுக்கு அறிக்கையிடல் வன்முறைகளின் போது அரசுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்தல் வன்முறைகளுக்கு எதிரான குரல் கொடுத்தல், பெண்களுடைய அபிவிருத்தி செயற்பாடுகளில் கவனம் செலுத்த இயற்கை வளங்கள் சூழல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்த கருத்தியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் போன்றன அமையும்.