ஆளுமை:ஸ்ரீலேக்கா, பேரின்பகுமார்

From நூலகம்
Name ஸ்ரீலேக்கா
Pages தருமலிங்கம்
Pages லோகேஸ்வரி
Birth 1977.05.14
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஸ்ரீலேக்கா, பேரின்பகுமார் (1977.05.14) யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தருமலிங்கம்; தாய் லோகேஸ்வரி. தனது ஆரம்ப கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்கல்வியை தெல்லிப்பளை யுனியன் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தில் கலை (சிறப்பு) மாணிப் பட்டத்தை பெற்றுள்ளார். மன்னார் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வியியல் டிப்ளோமாவை முடித்துள்ளார். ஆசிரியராகக் கடமையாற்றி வரும் ஸ்ரீலேக்கா பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத் துறையில் பிரவேசித்ததாகத் தெரிவிக்கிறார். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், நாடக இலக்கியம், நாவல் எழுதுவதென பன்முகத் திறமைகளைக்கொண்டவர். தாயகம், கலைமுகம் சஞ்சிகைகளிலும் வலம்புரி நாளிதழிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. கிணற்றங்கரை (நாடகங்கள்), கண்மணியே கவி பாடு (சிறுவர் பாடல்கள்), தூரத்து மழையும் இங்கு சாரல் அடிக்கும் (சிறுகதை), வேப்பங்குச்சி (சிறுகதைத் தொகுப்பு), மயில் இறகு (சிறுவர் இலக்கியம்), கிண்கிணி நாதங்கள் (சிறுவர் நாடகங்கள்), ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஸ்ரீலேக்கா.

விருதுகள்

கிணற்றங்கரை நாடகத்தொகுப்பு நூலுக்கு சாகித்திய விருது கிடைத்துள்ளது.

மயிலிறகு, கிண்கிணி நாதங்கள், கிணற்றங்கரை ஆகிய நூல்களுக்கு வடமாகாண சபையின் சிறந்த இலக்கிய விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய ரீதியில் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் தொடர்ந்து 15 வருடங்களாக விருதுகள் பெற்றுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு ஸ்ரீலேக்கா, பேரின்பகுமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.