ஆளுமை:விசுவலிங்கம், அன்னலிங்கம்

From நூலகம்
Name விசுவலிங்கம்
Pages அன்னலிங்கம்
Pages கனகம்மா
Birth 1958.01.14
Place கிளிநொச்சி, ஞானி மடம்
Category கூத்து அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விசுவலிங்கம், அன்னலிங்கம் (1958.01.14 - ) கிளிநொச்சி, ஞானிமடத்தை பிறப்பிடமாகக் கொண்ட கூத்து அண்ணாவி ஆவார். இவரது தந்தை அன்னலிங்கம்; தாய் கனகம்மா.இவர் அண்ணாவி துரைசாமி காலத்தைச் சேர்ந்தவர். இவர் தம்பையா அண்ணாவிடம் கூத்துக்களை கற்றுக்கொண்டதுடன், துரைசாமி அண்ணாவியுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர் தனது பாடசாலைக் காலத்தில் கலைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் காணப்பட்டார். துரைசாமி அண்ணாவியுடன் சேர்ந்து கதைகள் தயாரித்து பழக்கி மேடை ஏற்றி வந்தார். பிற்பட்ட காலத்தில் தானாக நாடகங்களை எழுதுவதுடன் நெறியாள்கையும் செய்தார்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் காணப்பட்ட இசை நாடகங்களின் கொப்பிகளை பெற்று அரிச்சந்திரா விலாசம், நல்லதங்காள், சத்தியவான் சாவித்திரி, ராமாயணம், ஸ்ரீவள்ளி போன்ற நாடகங்களை பழக்கி சாவகச்சேரி, கற்பெலி, கொழும்புத்துறை, கொடிகாமம், கச்சாய் போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவர் துருவன், காலவிருட்சம் போன்ற புராண நாடகங்களின் கொப்பிகளைப் பெற்று தனது இசையையும், இசை மொட்டுகளையும் உட்புகுத்தி எழுதினார். இவருடைய துருவன் நாடகத்தில் துருவன் ஆட்கள் பாடும் பாடலின் ஒரு வரி இன்னும் சிலரின் நினைவில் உள்ளது ‘இந்த அரசும் சிம்மாசனமும் எங்கள் துருவனுக்கு சொந்தமடி ஏனோ அரியரா இந்த வீண் வாது …’