ஆளுமை:பத்மராணி, இளங்கோவன்

From நூலகம்
Name பத்மராணி, இளங்கோவன்
Pages மகேசு, சதாசிவம்
Pages பரமேசஸ்வரி
Birth 1957.08.07
Pages -
Place அரியாலை
Category எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மராணி, இளங்கோவன் (1957.08.07) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மகேசு, சதாசிவம்; தாய் பரமேசஸ்வரி. ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை திருஞானசம்பந்தர் வித்தியாசாலை, தொடர்ந்து கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயின்ற இவர் மேல்படிப்பை வேம்படி மகளிர் கல்லூரியில் கற்றுள்ளார்.

புங்குடுதீவு பராசக்தி வித்தியாசாலை, யாழ் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளில் சுமாரக 6 வருடங்கள் ஆசிரியையாக கடமையற்றியுள்ளார். பின்னர் நாட்டுப் பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். அங்கும் தமிழ் பிள்ளைகளுக்கான ஒரு பாடசாலையை நிறுவி பல விழாக்களையெல்லாம் நிகழ்த்தி சிறப்பாக செயற்படுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவர்களுக்கு உரிய பரிசு எனும் சஞ்சிகையை மூன்று வருடங்கள் வெளியிட்டு வந்துள்ளார். செந்தமிழ் மழலைப் பாடல்கள், செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், சிறுவர் கதைப் பாடல்கள் போன்ற 6 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு சின்னப்பா பாரதி அறக்கட்டளை இவருக்கு விருது அளித்து கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.