ஆளுமை:சுதாகரி, மணிவண்ணன்;

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுதாகரி
தந்தை சுப்பிரமணியம்
தாய் வாலாம்பிகை
பிறப்பு 1974.02.04
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதாகரி, மணிவண்ணன் (1974.02.04) மட்டக்களப்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் வாலாம்பிகை. தனது ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு ஏறாவூர் மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார். போராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் முது கல்விமாணிப் பட்டத்தை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவில் திறமைச் சித்திபெற்ற இவர் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார். 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை ஆசிரியராகச் சேவையாற்றி 2016ஆம் ஆண்டு அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று மலேசியாவில் தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றுள்ளார். மட்/ககு/குமாரவேலியா கிராம சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகச் சேவையாற்றுகின்றார். தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு நிலையத்தில் வருகைதரு விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். பெண்கள் இலக்கியம், கட்டுரை விமர்சனங்கள், கவிதை, சிறுகதை, சிறுவர் கதைகள், நாடக விவாத அரங்கு போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டதுடன் அகில இலங்கை மட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். கனல், கவிதைகள் பேசட்டும் கவிதைத் தொகுப்புகளில் இ்வரது கவிதைப் படைப்புக்கள் வெளிவந்துள்ளது. ஒருதுளி வாழ்வு என்ற கவிதைத் தொகுப்பையும் அரங்க அலைகள் என்ற வெற்றி பெற்ற நாடகப் பிரதிகளின் தொகுப்பையும் பிறந்த நாள் பரிசு, யார் நல்ல தலைவர் ஆகிய சிறுவர் கதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். சரணி கலைக்கழகத்தின் தலைவராகவும், ஏறாவூர்ப்பற்று கலாசாரப் பேரவையின் உறுப்பினராகவும் சேவைாற்றி வருகிறார். தலைமைத்துவம், நாடகப் பயிற்சிப் பட்டறை போன்றவற்றை திறம்பட நடத்தும் வளவாளராகம் ஆலோசனை வழிகாட்டல் வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 1995-1995ஆம் ஆண்டுகளில் சரணி கலைக்கழகத்திற்காக ”சுவடு” எனும் சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். பின்வரும் தலைப்புக்களில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தெற்காசிய நாடுகளின் கல்விநிலை, வாழ்வியல் மரபுகளும் நம்பிக்கைகளும் கண்ணோட்டம், ஏறாவூர்ப்பற்று பாரம்பரியத் தொழில்களில் சலவைத் தொழில், மட்டக்களப்புக் கல்வி வலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் கிராம நகரப் புறங்களின் தாக்கம், ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் க.பெ.த. (ச/த) கணிதப் பாட அடைவில் எதிர்நோக்கும் சாவல்கள் போன்ற தலைப்புக்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலும் இவரின் ஆக்கங்கள் பல விருதுகளை பெற்றுள்ளது.

விருதுகள்


அகில இலங்கை ரீதியில் சிறந்த இளம் கலைஞர், எழுத்தாளர் ஆகிய இரு விருதையும் 1999ஆம் ஆண்டு பெற்றுள்ளார். அகில இலங்கை ரீதியில் ”திருந்திய உள்ளம்” நாடகத்திற்கு விசேட விருது. அகில இலங்கை ரீதியில் ”உயிர்ப்பு” நாடகத்தின் சிறந்த நடிகை விருது. அகில இலங்கை ரீதியில் ”உயிர்ப்பு” நாடகம் முதலிடத்துக்கான விருது. அகில இலங்கை ரீதியில் ”பிறந்தநாள்” என்ற சிறுவர் கதையாக்கத்துக்கான முதலாம் இடத்துக்கான விருது. அகில இலங்கை ரீதியில் ”கும்பமே கோயில்” நாடகம் சிறந்த நாடகம், சிறந்த கையழுத்துப் பிரதிக்கான இரண்டு விருதுகளையும் பெற்றுக்கொண்டது. 2013ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான குரு பிரதீபா பிரபா விருது. 2015ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் ”யார் நல்ல தலைவர்” என்ற சிறுவர் கதைக்கு முதலாம் இடம் மற்றும் விருதும் கிடைத்தது. ”வாழ்வின் நிஜம்’ என்ற நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகை்காக விருது.


குறிப்பு : மேற்படி பதிவு சுதாகரி மணிவண்ணன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.