ஆளுமை:சாரதா, பரஞ்சோதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாரதா பரஞ்சோதி
பிறப்பு 1965.11.03
ஊர் மூளாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாரதா பரஞ்சோதி (1965.11.03 - ) யாழ்ப்பாணம், மூளாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் தனது எட்டாவது வயதிலிருந்தே இசைக் கலையைப் பயில ஆரம்பித்து விஜயலட்சுமி, ஜீவா, ரத்தினசபாபதி, எஸ். கணபதிப்பிள்ளை, சிதம்பரேஸ்வரன் ஆகியோரிடம் இசைக் கலையைப் பயின்றார். 1992 - 1998ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தில் இசை விரிவுரையாளராகவும், 1998 - 2007ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம், சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் இசை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1992 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள கலைமன்றங்கள், கோயில்கள், கலாசாரபேரவை, இலங்கை வானொலி, கம்பன் கழகம், வட இலங்கை சங்கீத சபை போன்ற இடங்களில் தனது கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது இசை ஆளுமைக்காய் பண்ணிசை கலாவித்தகர், இசைக்கலைமணி, இசைஆழி ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 61
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சாரதா,_பரஞ்சோதி&oldid=183579" இருந்து மீள்விக்கப்பட்டது