"ஆளுமை:சாந்தி, சச்சிதானந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
[[படிமம்:Shanthisachithanantham.jpg]]|
+
படிமம்:[[படிமம்:Shanthisachithanantham.jpg]]|
 
பெயர்=சாந்தி|   
 
பெயர்=சாந்தி|   
 
தந்தை=சச்சிதானந்தம்|   
 
தந்தை=சச்சிதானந்தம்|   

03:11, 7 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர் சாந்தி
தந்தை சச்சிதானந்தம்
தாய் ஞானரத்தினம்
பிறப்பு 1958.08.14
இறப்பு 2015.08.27
ஊர் ஈச்சமோட்டை
வகை பன்முக ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி, சச்சிதானந்தம் (1958.08.14 - 2015.08.27) யாழ்ப்பாணம், ஈச்சைமோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை சச்சிதானந்தம்; தாய் ஞானரத்தினம். இவர் கொழும்பு அர்ச். பிறஜெட் கன்னியர் மடத்தில் கல்வி கற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் இலண்டன் (Royal Institute of British Architects) லும் கட்டடக் கலைத் துறையில் பட்டம் பெற்றவர். இசைத்துறையிலும் சிறந்து விளங்கினார் இவர் கற்ற கல்விக்கும் செயற்பாட்டிற்கும் தொடர்பற்று இருப்பது போல் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட தொடங்கினார். அதிலும் பெண்ணிய செயற்பாடுகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட உதவிகள், பெண்களின் பொருளாதார அபிவிருத்தி, வலுப்படுத்தல் வளமூட்டல் செயற்பாடுகள் என்பவற்றோடு மட்டும் நில்லது அரசியலிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காக போரடினார். இதற்காக தேர்தலில் நிற்கவும் தவறவில்லை. உலகின் பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் அட்டகாசமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளை பெண்கள் விதவைகளாகவும் பிள்ளைகளையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த வேளை பெண்கள் வீதிக்கு வந்து யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதில் முன்னின்றனர். ஆனாலும் போர் நிறுத்தம் காலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பி செயல்பூர்வமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் எமது நாட்டில் 1988 பகுதிகளில் குறைவு. அவர்களில் பிரகாசிக்கும் சூரியனாக எழுந்தவர் சாந்தி. இலங்கை ரூபவாஹினி நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ளார். மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான சாந்தி சச்சிதானந்தம். பெண்ணியவாதி, எழுத்தாளர், அரசியல் சமூக ஆய்வாளர் என பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்தியவர்.


இவர் ஆற்றிய சேவைகளாக சிறு பத்திரிகைகளிலும், உயர்கல்வி குழுவினரிடமும் மட்டும் தெளிவுற கருக்கொண்டிருந்த பெண் விடுதலை சிந்தனைகளை அடிமட்ட பெண்களிடம் கொண்டு செல்வதற்கு அயராது உழைத்தார். ஆணாதிக்க வர்க்கத்தின் அடக்கு முறைகளை எதிர்கொள்வதற்கான பெண்களின் மௌன கலைப்பானக செயற்பட்ட இவர் வறுமை தொடர்பிலும் கண்காணிக்க தவறவில்லை. ஐக்கிய நாடுகள் உலக ஸ்தாபனத்தின் சூழல் மகா நாட்டில் வருடாந்த அமர்வுகளில் கலந்து கொண்டு அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் 1997 தொடக்கம் 2002 வரை நாட்டின் அபிவிருத்திக்கும் வறுமைக்கும் ஆவன செய்துள்ளார்.

2002 ல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பேண்தகு அபிவிருத்திக்கான உலக மாநாட்டில் புள்ளி விபரங்களுடன் இலங்கை தொடர்பான விடயங்களை எடுத்துரைத்து கவனத்தை ஈர்க்க செய்தார். மன்று, விழுது, அமரா போன்ற அமைப்புக்களை ஆரம்பித்து அதனூடாக பெண்களுக்கு சேவைகளை வழங்கி வந்தார். இவற்றின் கிளைகள் நாட்டின் பல பகுதிகளிலும் இயங்குகின்றன.அன்னையர் முன்னணி, மாதர் மறுமலர்ச்சிப் பேரணி ஆகிய பெண்கள் அமைப்புகளிலும் செயற்பட்டவர்.

தலைவி, சஞ்சீவி போன்ற சஞ்சிகைகளை பெண்களுக்காக வெளியிட்டார் .இச் சஞ்சிகைகள் இன்று வரை இலவச இதழ்களாக வெளிவருகின்றன. பெண்களின் தலைமைத்துவ பயிற்சிகள் பலவற்றை வழங்கி வந்தார். பெண்களின் சுவடுகளில் எனும் மனித தோற்ற வரலாற்றை எழுதியவர். இதுவரை வடக்கு கிழக்கில் 13 அமைப்புக்களை நிறுவிய இவர் ராஜசிங்கன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கேற்றாற்போல் அவரும் சமூக சேவையாளராக இருந்தமையினால் இவர்கள் பயணம் நன்கமைந்தது. இவ்வாறு எழுச்சி பெற்று விளங்குகையில் சாந்தியின் வாழ்கைப் பயணம் 2015 ம் ஆண்டு ஆவணி மாதம் 27ம் திகதி முடிவுற்றது. இவரின் பின்னர் இவரது மூத்த மகள் மைதிலி பிரணவன் இப்பயணத்தை தொடர்கின்றார்.


படைப்புகள்


வளங்கள்

  • நூலக எண்: 14175 பக்கங்கள்
  • நூலக எண்: 794 பக்கங்கள்
  • நூலக எண்: 3746 பக்கங்கள்


வெளி இணைப்புக்கள்