ஆளுமை:சரோஜினிதேவி, கனகரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரோஜினிதேவி
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் பாக்கியம்
பிறப்பு 1949.06.08
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரோஜினிதேவி, கனகரத்தினம் (1949.0608) யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை; தாய் பாக்கியம். ஆரம்பக் கல்வியை மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இடைநிலை , உயர்நிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றார். கனிஷ்டபல்கலைக்கழக பலாலியில் பயிற்றப்பட்ட ஆசியரான இவர் விவசாய விஞ்ஞான ஆசிரியராவார். பல பாடசாலைகளில் ஆசிரியராக சில்லாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவராவார். இவர் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்றுள்ளார். கட்டுரை, கதை, பாடல்கள், கவிதை, வாழ்த்து மடல் ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் சரோஜினிதேவி. இவரின் ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் இனிய நந்தவனம், தமிழ் அன்னை ஆகிய சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன. சாரணிய தேசிய பயற்றுனர் சபையின் அங்கத்தவராக இருப்பதுடன் விரிவுரையாராகவும் உள்ளார். ஈழத் தமிழர் வரலாறு என்ற தலைப்பிலான இவரின் நூல், வெளியீடு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதுடன் சாரணியம் தொடர்பிலான ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலும் வெளியீடு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. அத்துடன் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு படிப்பதில் அவர்களுக்கு ஆர்வம் வரும் வகையில் உளவள ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

விருதுகள்

கவிதை எழுதி பாடியமைக்காக 2017ஆம் ஆண்டு மும்பாயில் விருது.

இவரின் கவிதைக்காக பர்மாவில் இனிய நந்தவனம் வழங்கிய விருது.

தேசிய மேன்மை விருது இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால் இரு தடவை வழங்கப்பட்டது.

குறிப்பு : மேற்படி பதிவு சரோஜினிதேவி, கனகரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.