ஆளுமை:குமாரசிங்கம், இளையதம்பி

From நூலகம்
Name குமாரசிங்கம்
Pages இளையதம்பி
Pages பாக்கியம்
Birth 1956.10.10
Place கிளிநொச்சி, வலைப்பாடு
Category நாட்டுக்கூத்து கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசிங்கம், இளையதம்பி அவர்கள் (1956.10.10 - ) கிளிநொச்சி, வலைப்பாட்டை பிறப்பிடமாகக் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர் ஆவார். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் வள்ளியம்மை. இவர் தன் ஆரம்ப கல்வியை நெடிந்தீவில் உள்ள இராமநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

இவர் தம் ஆசிரியப் பணியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் 1965 ஆம் ஆண்டு தொடக்கம் 1968 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழை பயிற்றுவித்தார். அத்தோடு திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் தமிழை கற்பித்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவர் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரை யப்பான் ரோக்கியோ கக்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பேராசிரியராகக் கடமையாற்றினார். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய போக்குகள், சி.வை. தாமோதரம்பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க, தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் (இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், ஜப்பானியக் காதற் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, இலங்கைத் தமிழியல் சில பதிவுகள் எனப்பல ஆய்வியல் நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவற்றுடன் சுதந்திரன், ஈழநாடு வலம்புரி, வீரகேசரி முதலான பத்திரிகைகளில் எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். இவர் சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் இல்லத்திட்டப் பணிப்பாளராக 14 ஆண்டுகள் கடமையாற்றியதுடன் புலம்பெயர் நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியாளராகவும் பாடநூல் ஆக்கப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இவரது இலக்கியப் பணிக்காக 2008 ஆம் ஆண்டு வடமாகாண ஆளுநர் விருது கிடைக்கப் பெற்றது. அத்தோடு 1988 இல் பேராசிரியர் சண்முகதாசுடன் இணைந்து எழுதிய இத்திமரத்தாள் நூலுக்கு யாழ் இலக்கிய வட்டப் பரிசும் நல்லூர் கலாச்சாரப் பேரவையின் 2008 ஆம் ஆண்டுக்கான கலைஞானச்சுடர் விருதும் கிடைத்துள்ளன.