ஆளுமை:கலாவதி, பிரகதீஸ்வர சர்மா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:24, 11 மார்ச் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலாவதி
தந்தை கைலாசநாத குருக்கள்
தாய் விசாலாட்சி அம்மா
பிறப்பு 1945.09.04
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாவதி, பிரகதீஸ்வர சர்மா (1945.09.04) யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பிறந்த கலைஞர். இவரது தந்தை கைலாசநாதகுருக்கள்; தாய் விசாலாட்சி அம்மா. தனது ஆரம்ப கல்வியை நீர்கொழும்பு சென்மேரீஸ் கொன்வென்ட்டிலும் புங்குடுதீவு ஸ்ரீசுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றிலும் கற்றார். 1968ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் சங்கீத கலாவித்தகரும் சைவசித்தாந்த பண்டிதரும் ஆவார். அத்துடன் இவர் தரம் ஐந்து ஆசிரிய ஆலோசகராக யாழ் வலயத்தில் கடமையாற்றியுள்ளார். தென்தீப சஞ்சிகையிலும், முன்பள்ளி சஞ்சிகைகளிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். நாடக ஆக்கம், பாடலாக்கம், நாட்டிய நாடகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் கலாவதி.

விருதுகள்

வேலணை பிரதேச சபையின் கலைவாரிதி விருது. யாழ் வலயம் சர்வதேச ஆசிரிய தினத்தை முன்னிட்டு 1991ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

குறிப்பு : மேற்படி பதிவு கலாவதி, பிரகதீஸ்வர சர்மா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது