ஆளுமை:இரா,சர்மிளாதேவி

From நூலகம்
Name சர்மிளாதேவி
Birth
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரா,சர்மிளாதேவி கண்டி கலஹாவில் பிறந்த எழுத்தாளர். கலஹா ஸ்ரீஇராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்த்துறையில் இரு வருடங்கள் தற்காலிக விரிவுரையாளராகவும் கடமையாற்றிய இவர் தற்பொழுது கண்டி திரித்துவக் கல்லூரியில் ஆசிரியையாகக் பணியாற்றுகின்றார். கட்டுரை, கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், விவாதம், மேடைப்பேச்சு என பன்முக திறமைகளைக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இளங்கதிர், திரித்துவக்கல்லூரியின் இந்து மாணவர் மன்ற வெளியீடான சக்தி சஞ்சிகை ஆகியவற்றுக்கு இதழாசிரியராகவும் இருந்துள்ளார். அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரிலும் இவரது கட்டுரை வெளிவந்துள்ளது. நாளிதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றிலும் இவர் எழுதிவருகிறார். முதுத்தத்துவமாணிக் கற்கை நெறியை மேற்கொண்டு மலையகத் தமிழ் நாவல்களில் சமுதாயப் பிரச்சினைகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மலையகத் தமிழ் சஞ்சிகைகள் எனும் இவரது ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது.

படைப்புகள்

  • மலையகத் தமழ்ச் சஞ்சிகைகள் ஓர் ஆய்வு

Resources

{{வளம்|13573