ஆளுமை:இரத்தினசிங்கம், கந்தையா

From நூலகம்
Name இரத்தினசிங்கம்
Pages கந்தையா
Pages தவமணி
Birth 1940.07.30
Place கிளிநொச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இரத்தினசிங்கம், கந்தையா (1940.07.30 - ) கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர், சமூகசேவகர், விமர்சகர், ஊடகவியலாளர். இவரது தந்தை கந்தையா; தாய் தவமணி. இவர் சாவகச்சேரி மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவரது முதலாவது ஆக்கம் 1959 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். தினக்குரலின் பகுதி நேர ஊடகவியலாளராகப் பணியாற்றியதுடன், சுதந்திரன் பத்திரிகையிலும் செய்திகளை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 63-67