ஆளுமை:அஹ்மத், யாஸீன் பாவா

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஹ்மத்
தந்தை யாஸீன் பாவா
தாய் சுலைஹா உம்மா
பிறப்பு 1945.04.29
இறப்பு 1992.12.26
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஹ்மத், யாஸீன் பாவா (1945.04.29 - 1992.12.26) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை யாஸீன் பாவா; தாய் சுலைஹா உம்மா. இவர் வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையிலும் ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையிலும் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை (தமிழ் ஆசிரியர்), பேராதனைப் பல்கலைக்கழகம் (கலைமாணி), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (பட்ட மேற்படிப்புக் கல்வி டிப்ளோமா) ஆகிய இடங்களில் பட்டம் பெற்றார்.

1963 இல் ஆசிரிய மாணவராகப் பணிபுரியத் தொடங்கிய இவர் 1968 இல் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். ஓட்டமாவடி மகா வித்தியாலயம், வாழைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம், கணமூலை மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பணியாற்றினார். 1982 இல் மூதூர் கல்வி வலயத்தில் வட்டாரக் கல்வி அதிகாரியானார். பின் 1991 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார்.

1967 இல் இளம்பிறை சஞ்சிகையில் எழுதத் தொடங்கிய இவர் 26 சிறுகதைகளையும் 30 கவிதைகளையும் 12 உருவகக்கதைகளையும் 7 நாவல்களையும் குறுநாவல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புதிய தலைமுறைகள் (நாவல், 1976), வாழைச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு (1992), மொழியும் வழியும் (1992), முக்காடு (சிறுகதைகள், 1999), தரிசனம் நிலவின் நிழலில் (குறுநாவல்கள், 1999) போன்றவை இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 68-73