ஆளுமை:அருந்தவராஜா, கதிரிப்பிள்ளை

From நூலகம்
Name அருந்தவராஜா
Pages கதிரிப்பிள்ளை
Pages பாய்க்கியம்
Birth 1954.02.27
Place இளவாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருந்தவராஜா, கதிரிப்பிள்ளை 1954.02.27 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், விமர்சகர், சமூகசேவையாளர். இவரது தந்தை கதிரிப்பிள்ளை; தாய் பாய்க்கியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை 'வாழ்க கல்மின்' என்று கல்வி புகட்டும் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்று பின்னர் க.பொ.த.சாதாரண வகுப்பு வரை காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் பயின்று சித்தியடைந்தார். சென்னை மாணவர் மன்றம், மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து நடாத்தும் தமிழ்மணிப் புலவர் பட்டத்தை மூன்றாண்டுகள் பயின்று முதற்பிரிவில் சித்தியடைந்து பெற்றுக் கொண்டார்..

மேழிக்குமரன், அருந்தவராஜா என்னும் பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், நூல் ஆய்வுகள், நாவல் என்பவற்றை எழுதி வரும் இவர் இதுவரை ஏறக்குறைய 25 சிறுகதைகள் வரை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 101-106
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 37-43
  • நூலக எண்: 13946 பக்கங்கள் 06