ஆளுமை:அருணாசலம், ச.

From நூலகம்
Name அருணாசலம்
Birth 1864.10.31
Place காரைநகர்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலம், ச. (1864.10.31 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். ஆறுமுகநாவலரின் மறைவின் பின் நாவலரின் பணியைத் தொடரப் புறப்பட்ட ஒளியே திரு. ச. அருணாசலம். இவர் தனது ஆரம்பக் கல்வியை களபூமி கிறிஸ்தவ பாடசாலையில் கற்றார்.

5 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற அருணாசலம் தாமொரு பயிற்றப்பட்ட ஆசிரியராய் வரவேண்டும் என்ற ஆர்வத்தினால் தெல்லிப்பளையில் அமெரிக்க மிஷனரியால் நடாத்தப்பட்ட ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையில் பிரவேச வகுப்பில் சேர்ந்து கற்றுச் சித்திபெற்றார்.

யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் எவ்வாறு சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கப் போரிட்டாரோ அதே போல காரைநகரில் சைவத்தையும், தமிழையும் பாதுகாத்தவர் திரு அருணாசலம் அவர்களே. இவரின் முயற்சியினால் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் பாடசாலை என்பன ஆரம்பிக்கப்பட்டன.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 274-280