ஆளுமை:அருணாசலம், கனகசபை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:48, 26 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கருணாகரன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கருணாகரன்
தந்தை கனகசபை
தாய் காசிப்பிள்ளை
பிறப்பு 1946.01.14
இறப்பு 2015.04.27
ஊர் சாவகச்சேரி
வகை கல்வியியலாளார், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாகரன், கனகசபை (1946.01.14 - 2015.04.27) யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர்; கல்வியியலாளர். இவரது தந்தை கனகசபை; தாய் காசிப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகப் பயின்று 1971 இல் இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்ற இவர் 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்பாக ஆராய்ந்து 1974 இல் முதுகலைப் பட்டமும் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் தொடர்பாக ஆராய்ந்து 1979 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டமும் பெற்றார். 1996 இல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றாதோடு 1995 முதல் 1998 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

பாரதியார் சிந்தனைகள், சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள், காலக்கண்ணாடி, இலங்கையின் மலையக தமிழர், மலையகத் தமிழ் இலக்கியம், இலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள், இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள், இளங்கதிர், சாதனையாளர் சாரல்நாடன் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

தமிழ் வரலாற்றுப் புதினம் தொடர்பான தமது கலாநிதிப்பட்ட ஆய்வேட்டுக்காகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் முதன் முதலாக வழங்கப்பட்ட பொன்னம்பல முதலியார் பரிசு இவருக்கு வழங்கப்பட்டதோடு சாகித்திய ரத்தினா விருதும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 178-180