ஆளுமை:அருணகிரி, வாதவூர்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:54, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணகிரி
தந்தை வாதவூர்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1927.04.26
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணகிரி, வாதவூர் (1927.04.26 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். இவரது தந்தை வாதவூர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் இடைநிலைக் கல்வி வரை வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்று நல் மாணவராகத் திகழ்ந்தார். பின்னர் தனது மாமனாரின் வழியில் வியாபாரத்தை ஆரம்பித்து வேலணையிலிருந்து புகையிலையைக் கொள்வனவு செய்து வறக்காபொலவில் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்.

இவர் சுமார் 40 வருட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிங்கள, முஸ்லீம் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார். இதற்குச் சான்றாக முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கா, நீதி அமைச்சர் நிஸங்க விஜயரத்தின ஆகியோர் அருணகிரியின் நெருங்கிய நண்பர்கள் என்பதோடு அருணகிரியின் தாய், தந்தையரது மரணச்சடங்கிலும் அவர்கள் பங்குபற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அருணகிரி அவர்கள் வேலணை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அரசாங்கத்தால் நியமனம் பெற்றவர். சைவசமயத்தில் அளவில்லாப் பற்று கொண்ட இவர், வேலணையில் உள்ள ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கியதுடன், வேலணை மக்களுக்காக வீதி புனரமைப்பு, மின்சார வசதியைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 453-457