ஆளுமை:அரவிந்தன், கி. பி.

From நூலகம்
Name அரவிந்தன்
Pages பேதுறு கிறிஸ்தோபர்
Pages மாசிலாமணி
Birth 1953.09.17
Pages 2015.03.08
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரவிந்தன், கி. பி. (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி. இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977 இல் புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.

இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதோடு ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். 'அப்பால் தமிழ்' என்னும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தளத்துக்கும் பங்களித்தார். இனி ஒரு வைகறை (1991), முகம் கொள் (1992), கனவின் மீதி (1999), பாரிஸ் கதைகள் (சிறுகதைகள், 2004) ஆகியவை இவரது நூல்கள்


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 07-08
  • நூலக எண்: 15225 பக்கங்கள் 23