ஆளுமை:அரவிந்தன், கி. பி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரவிந்தன்
தந்தை பேதுறு கிறிஸ்தோபர்
தாய் மாசிலாமணி
பிறப்பு 1953.09.17
இறப்பு 2015.03.08
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரவிந்தன், பேதுறு கிறிஸ்தோபர் (1953.09.17 - 2015.03.08) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது இயற்பெயர் கிறிஸ்தோபர் பிரான்சிஸ். இவரது தந்தை பேதுறு கிறிஸ்தோபர்; தாய் மாசிலாமணி. தனது கல்வியை ஆரம்பத்தில் நெடுந்தீவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் பயின்றார். ஈரோஸ் அமைப்பில் போராளியாக அறியப்பட்ட இவர் 1977 புலம்பெயர்ந்து பிரான்சில் குடியேறினார்.

இவர் பி.பி.சி தமிழோசையின் பரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதோடு ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். 'அப்பால் தமிழ்' என்னும் இணையத்தளத்தினை நடாத்தியதோடு புதினப்பலகை இணையத்தின் பங்காளராகவும் விளங்கினார். 'இனி ஒரு வைகறை', 'கனவின் மீதி', 'முகம் கொள்' ஆகிய கவிதை நூல்களையும் 'பாரிஸ் கதைகள்' என்ற சிறுகதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 08 பக்கங்கள் 100
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 07-08
  • நூலக எண்: 15225 பக்கங்கள் 23
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரவிந்தன்,_கி._பி.&oldid=227111" இருந்து மீள்விக்கப்பட்டது