ஆளுமை:அப்துல் காதர் லெப்பை

From நூலகம்
Name அப்துல் காதர் லெப்பை
Birth 1913.09.07
Pages 1984.10.07
Place காத்தான்குடி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் காதர் லெப்பை (1913.09.07 - 1984.10.07) காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 1934 இல் கண்டி உடதலவின்னை தமிழ்ப் பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி 1939 இல் கல்முனை நற்பிட்டிமுனைப் பாடசாலையில் கல்வி கற்பித்துப் பின்னர் 1943 இல் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். இவர் தாருல் இஸ்லாம் பத்திரிகையில் அதான் என்னும் புனைபெயரில் கவிதை எழுதியதுடன் தினகரனில் ஆய்வாளன் என்னும் புனைபெயரில் கலாசாரம் என்னும் கட்டுரையை எழுதியுள்ளார். இவர் கல்முனையில் முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.

இவர் இக்பால் இதயம், இறசூல் சதகம், தஸ்தகீர் சதகம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், முறையிடும் தேற்றமும், மெய்ந்நெறி, ஜாவீது நாமா, பாதும்மா சரிதை, கார்வான் கீதம் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளதுடன் என் சரிதம் என்னும் சுயசரிதை நூலையும் ரூபாய்யாத் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். இவர் உமர்கையாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" நூலுக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளார்.

இவர் 1965 ஆம் ஆண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் கவிஞர் திலகம் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 15515 பக்கங்கள் 39
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 227-234