ஆளுமை:அகிலன், பாக்கியநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலன்
தந்தை பாக்கியநாதன்
பிறப்பு
ஊர் அராலி
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலன், பாக்கியநாதன் யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். காண்பியக்கலைகள், நாடக அரங்கியல் மற்றும் மரபுரிமைக்கல்வி ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் பெற்று பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் (நுண்கலை) பட்டமும் பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் கலை விமர்சனத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார்.


பதுங்குகுழி நாட்கள், சமரகவிகள், காலத்தின் விளிம்பு ஆகியன இவரது நூல்கள். இதில் இவரது முதலாவது தொகுப்பான பதுங்குகுழி நாட்கள் அன்றைய யாழ்ப்பாணம் பற்றிய மிகச்சிறந்த இலக்கியப் பதிவுகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. மரபுரிமைகள் பற்றியும் ஆவணப்படுத்தல் பற்றியும் அக்கறையுடன் செயலாற்றிவரும் அகிலன் மக்கள் மத்தியில் மரபுரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் ‘காலத்தின் விளிம்பு’ என்கிற பெயரில் வெளியாகியது.


“இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்” என்ற மூன்று பாகங்களை கொண்ட தொகுப்பு நூலின் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளுக்கும், வாதங்களும் விவாதங்களும் என்ற நூலுக்கும் இணைத்தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார்.


வெளி இணைப்புக்கள்

பா. அகிலன் பற்றி அருண்மொழிவர்மன்