ஆளுமை:திரேசம்மா, ஜோசவ்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:22, 11 மார்ச் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரேசம்மா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரேசம்மா, ஜோசவ் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த கலைஞர். கொழும்புத்துறை கூத்துப் பாரம்பரியத்தில் இருந்து வந்த பெண் அண்ணாவியார் ஆவார். சிறுவயதில் இருந்து கூத்துக்களில் நடித்து வந்தவர். மத்தேகமவுறம்மா, எஸ்த்தாக்கியர், ஜெனோவா, நொண்டி, பண்டாரவன்னியன், கிறிஸ்தோப்பர், தியாகராகங்கள் போன்ற பல கூத்துக்களை நெறிப்படுத்தியவர். தியாகராகங்கள் என்ற கூத்தினை இவரே எழுதி அண்ணாவியராக இருந்து நெறிப்படுத்தியவர். 1975ஆம் ஆண்டு நொண்டி நாடகத்தினை அண்ணாவியார் பாலுவிலுப்பிள்ளையுடன் இணைந்து இலங்கை வானொலியில் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பியவர்.

விருதுகள்

திருமறைக்கலாமன்றம் 1993ஆம் ஆண்டு நடத்திய அண்ணாவிமார் கௌரவிப்பு விழாவில் இவரும் கௌரவிக்கப்பட்டார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:திரேசம்மா,_ஜோசவ்&oldid=301880" இருந்து மீள்விக்கப்பட்டது