ஆளுமை:தம்பிமுத்து, இராமு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:15, 5 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிமுத்து
தந்தை இராமு
தாய் -
பிறப்பு 1902
இறப்பு 1959
ஊர் கிளிநொச்சி
வகை கூத்துக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பிமுத்து, இராமு (1902-1959) மட்டுவில் மேற்கு தம்பிரை கிராமத்தைச் சேர்ந்த கூத்துக்கலைஞர். இவரது தந்தை இராமு. இவர் காத்தான் கூத்து பழக்கி வந்தார்.சிலர் இவரை தம்பிமுத்து அண்ணாவி என்று தான் அழைப்பார்கள். செல்லியம்மன் கோயில், ஆரியம்பொந்து, தம்பிராய் என்றும் பல இடங்களில் காத்தான் கூத்தனைப் பழக்கி மேடையேற்றினார்.

இவர் 1959 ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த போது வெண்கல உடுக்கு கைத்தாளம் ,நெத்திப்ப்பட்டங்கள், கும்ப சேட், கோவலன் கதை புத்தகம், தேசிங்கு ராஜன் கதை புத்தகம், காத்தான் கூத்து கொப்பி என்பன இவர் வீட்டில் இருந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றார்கள்.

அண்ணாவியின் சகோதரி சின்னம்பிள்ளை. அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் கதிராசி, கதிராசியின் மகள் நடேசபூபதி. 1955 செல்லியம்மன் கோயில் திருவிழாவுக்கு காத்தான் கூத்து போடப்பட்டது.

இவருடைய உறவினர்கள் வழித்தோன்றல்கள் மட்டுவில் நாடு மேற்கில் தற்போதும் வாழ்ந்து வருகின்றார்கள் இவர் காத்தான் கூத்து மட்டுமன்றி கோவலன் கதை தேசிங்கு ராஜன் கதை போன்றவற்றையும் பழகி வந்த இவருடைய நாடகங்கள் சில தம்பி ஆலடியில் நடைபெற்றுள்ளதாக முதியவர் கூறுகின்றார்கள். பொன்னம்பலம் அண்ணாவை அவர்கள் சிறுவயதிலிருந்து தம்பிமுத்து அண்ணாவை அவர்களை கூத்துக்களையும் குருவாகக் கொண்டு கூத்துக்களை கற்றுக்கொண்ட சான்றுகளையும் காணக்கூடியதாக உள்ளது.