ஆளுமை:கமலினி, செல்வராஜன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:42, 16 செப்டம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலினி
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் தனபாக்கியம்
பிறப்பு 1953.11.29
இறப்பு 2015.04.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலினி, செல்வராஜன் (1953.11.29) யாழ்ப்பாணத்தில், பிறந்த ஊடகத்துறையில் பன்முகம் கொண்ட பெண் ஆளுமையாவார். இவரது தந்தை தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை மொழியிலாளரும், எழுத்தாளருமாவார்; தாய் தனபாக்கியம் வயலின் கலைஞராவார். கமலினி, செல்வராஜன் தனது ஆரம்ப கல்வியை கொள்ளுப்பிட்டி சென் அந்தனிஸ் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியினை பம்பலப்பிட்டி சென் கிளயர்ஸ் மகளிர் கல்லூரியிலும் கற்றார். களனிப் பல்கைலைக்கழகத்தின் தொடர்பூடகவியலில் கலைமானிப்பட்டமும் பெற்றுள்ளார். 1980ஆம் ஆண்டு இவர் ஊடகத்துறையில் நுழைந்தார். கமலினி இலங்கையின் பிரபல கலைஞரான சில்லையூர் செல்வராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதிசயன் என்றொரு மகன் உண்டு. கமலினி செல்வராஜன் நாடறிந்த அறிவிப்பாளராக, திரைப்பட மற்றும் நாடக நடிகையாக, இலக்கியவாதியாக, ஒலி, ஒளிபரப்பாளராக, தொடர்பூடகவியல் விரிவுரையாளராக, ஊடகவியல் பயிற்றுவிப்பாளராக, மொழிப்பெயர்ப்பாளராக, ஊடகவியல் பயிற்றுவிப்பாளராக, மொழிப்பெயர்ப்பாளராக, விளம்பரதொகுப்பாளராக பல்துறைகளில் தடம் பதித்தவர். கமலினி செல்வராஜன் ரூபவாஹினி, ஐ.ரி.என் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்துள்ளார். இசை மற்றும் நடனத்துறைகளிலும் சிறந்து விளங்கினார். 30 வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சி ஒலி ஒளிபரப்பாளராகவும் பணியாற்றினார். இவரின் நாடகத் திறமையை வெளிகொண்டு வந்த வானொலி நாடகமாக "தணியாத தாகம்" விளங்கியது. இவர் "திருப்பங்கள்", "எதிர்ப்பாராதது", "சமூகசேவகி" போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். கமலினி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நாடக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரின் கணவனான சில்லையூரினால் ஏற்கனவே எழுதப்பட்டு சிதறிப்போயிருந்த கவிதைகள், காவியங்களைத் தேடித்திரட்டினார். தேர்ந்தெடுத்த கவிதைகள் வரிசையில் சில்லையூர் செல்வராசன் கவிதைகள் ( தொகுதி - 1) நூலை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் கமலினியால் தொகுக்கப்பட்டு வெளியான அந்த நூலில் சில்லையூரின் கவியரங்கப்பாடல்கள், தேசபக்திப்பாடல்கள், புலவன் மனங்கவர்ந்த பொன்னாடுகள், அகம் - புறம் , அங்கதம், கவிஞனின் தத்துவம், பெண்மை, இசைப்பாடல்கள், பரிவும் - பிரிவும் , நெடும்பா , மொழிபெயர்ப்பு பாடல்கள் என அதிகாரங்கள் பிரித்து அந்தத் தொகுதியை வெளிக்கொணர்ந்தார் கணவன் இறந்த பின்னும் நெற்றியில் திலகத்துடன் பெண்ணியம் பேசும் அளவுக்கு துணிவும் கொண்டவராக கமலினி செல்வராஜன் விளங்கினார். ரூபவாஹினி தொலைக்காட்சியின் "அயிபோவன்" நிகழ்ச்சி தமிழ் சிங்கள நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு சான்றாக வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறையில் மிகவும் புகழின் உச்சியில் இருந்த கமலினி செல்வராஜன் நோயுற்றபொழுது அவரின் அந்திமகால துயரத்தை ரவிசர என்னும் சிங்கள நாளிதழே வெளி உலகிற்கு கொண்டுவந்தது. இவரின் ஒரே மகன் அதிசயன் தாயாக மாறி கமலினி நோயுற்ற காலத்தில் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார். கமலினி செல்வராஜன் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் இன்றைய இளம் சமூதாயத்திற்கு ஒரு நல்ல உதாரண புருசனான தனது மகனை இந்த சமூதாயத்திற்கு விட்டுச் சென்றுள்ளார். விருதுகள்: கலாசார அமைச்சினால் 1995ஆம் ஆண்டு நாட்டுக்கூத்துக்கு இவர் வழங்கிய பங்களிப்புக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கொழும்பு றோயல் கல்லூரி நாடகத்துறைக்காக இவர் வழங்கிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரி 2008ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது.

வெளி இணைப்புக்கள்

பதிவுகள் - பன்னாட்டு இணைய இதழில் கமலினி, செல்வராஜன் பற்றி