ஆளுமை:பாலசுப்பிரமணியசிவம், சீவரெத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:54, 22 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலசுப்பிரமணியசிவம்
தந்தை சீவரெத்தினம்
பிறப்பு 1941.10.12
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியசிவம், சீவரெத்தினம் (1941.10.12 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சீவரெத்தினம். இவர் ஓய்வு பெற்ற புகையிரதநிலைய அதிபராகவும், பகுதிநேர ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

1956ஆம் ஆண்டு முதல் நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் இவர் நாடக எழுத்தாளராக, நாடக இயக்குனராக, நாட்டுக்கூத்து நடிகனாக திகழ்ந்து மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு ஆங்கில, தமிழ் நாடகங்களை எழுதி இயக்கியுமுள்ளார். மேலும் வட்டுக்கோட்டை நல்லதம்பி நடகசபா முன்னாள் செயலாளராகவும், நாட்டுக்கூத்து அபிவிருத்தி சங்க முன்னாள் செயலாளராகவும், காந்திஜீ சனசமூக நிலைய கிராம அபிவிருத்தி சங்க நாடக உறுப்பினராகவும் இவர் கடமையாற்ரியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 197