ஆளுமை:அழகேந்திரன், அப்புத்துரை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 20 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அழகேந்திரன்
தந்தை அப்புத்துரை
பிறப்பு 1954.02.14
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகேந்திரன், அப்புத்துரை (1954.02.14 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை அப்புத்துரை. 1970 ஆம் ஆண்டிலிருந்து வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் இவர், பாடசாலைக் காலங்களில் புராணக் கதைகளை நாடகமாக்கி நடித்தும், மாணவ கலைப்பெரு மன்றத்தினை உருவாக்கித் தலைமை தாங்கி நாடகங்கள் பழக்கி நடித்தும், வில்லுப்பாட்டுக்களை நிகழ்த்தியும் வந்துள்ளார். இவர் 2 ஆவது உலக மகாநாட்டில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவர் கலைமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 81