|
|
நூலகம்:வாசிகசாலை
நூலகம் இருந்து
|
வாசிகசாலை
தமிழ் நாளிதழ்களின் ஆவணக்காப்பகம்
|
|
புதிய பூமி
புதியபூமி இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிகையாகும். இடதுசாரிப் பார்வையுடன் அரசியல் கட்சி ஒன்றின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக இருபதாண்டுகளுக்கு மேலாக வெளிவருகிறது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
தின முரசு
தினமுரசு பத்திரிகை வாராந்தப் பத்திரிகையாக மே 1993 இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவருகிறது. அற்புதன் அவர்களை ஆரம்ப ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினமுரசு ஈழமக்கள் அரசியல் கட்சியினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
காரை ஆதித்தியன்
காரை ஆதித்தியன் சுவிஸ்லாந்தில் இருந்து வெளிவரும் காலாண்டுப் பத்திரிகையாகும். காரை நகர் பிரதேசத்தினை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகின்றது. 2002 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகின்றது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
தெளிவு
தெளிவு இலங்கையில் இருந்து வெளிவரும் மாதாந்தப் பத்திரிகையாகும். இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைக்கவும் கொடுக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
|
சுடர் ஒளி
சுடரொளி செப்டம்பர் 2000 இலிருந்து கொழும்பிலிருந்து வெளிவருகின்றது. இது ஒரு தமிழ்த்தேசியப் பத்திரிகையாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் வார இதழாகத் தொடங்கிப் பின்னர் நாளிதழாக வெளிவருகிறது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
மீள்பார்வை
மீள்பார்வை என்னும் பத்திரிகை வாராந்தப் பத்திரிகையாக கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. இலங்கையில் வாழும் முஸ்லிம்களது பார்வையைப் பிரதிபலிப்பதாக மீள்பார்வை வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
செஞ்சக்தி
செஞ்சக்தி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் ஏடு. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகள் - தேசிய முதலாளித்துவத்தை விமர்சித்தலும் எதிர்த்தலும் - வர்க்கநிலையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளிகளை ஒன்றிணைத்தலும் செஞ்சக்தி பத்திரிகையினால் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை மக்கள் விடுதலை முன்னணி அங்கீகரிக்கின்றது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
புதிய சமதர்மம்
புதிய சமதர்மம் நவ சமசமாஜக்கட்சியின் ஏடு. வர்க்க நிலையில் சிங்களவர்களையும் தமிழர் மற்றும் முஸ்லீம்களையும் ஒன்றிணைத்துப் போராடவேண்டிய தேவையை வலியுறுத்துவதோடு தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கின்றது. தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை ஏற்றுக் கொள்வதுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாணலும் வலியுறுத்தப்படுகின்றது.
அண்மைய பதிப்புகள்
மேலும்...
|
|
|