ஆளுமை:ஆனந்த குமாரசுவாமி, முத்து குமாரசுவாமி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 28 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி
தந்தை முத்து குமாரசுவாமி
தாய் எலிசெபத் கிளே-பீவி
பிறப்பு 1877.08.22
இறப்பு 1947.09.09
ஊர் கொழும்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி, முத்து குமாரசுவாமி (1877.08.22 - 1947.09.09) கொழும்பில் பிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர், ஆராய்ச்சியாளர், நூலாசிரியர். இவரது தந்தை முத்து குமாரசுவாமி; தாய் இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசெபத் கிளே-பீவி. 1889 ஆம் ஆண்டில் உவைக்கிளிவுக் கல்லூரியில் சேர்ந்தார். 1987 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1900 இல் அறிவியல் இளமாணிப் பட்டம் பெற்றார்.

இந்தியக் கலையின் சில எடுத்துக்காட்டுக்கள், அபிநயக் கண்ணாடி, சிவநடனம், இராசபுத்திரச் சித்திரக் கலை, இந்தியச் சித்திரங்கள்' போன்ற பல நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளதோடு அரசியல், பல்வேறு சமயங்கள், கலைகள் தொடர்பாக ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். வடமொழி நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். மண்ணியல் ஆய்வாளராக விளங்கிய இவர் 'தொரநயிற்' எனும் தாதுப் பொருளை முதலில் கண்டறிந்தவர்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 119 பக்கங்கள் 05-36
  • நூலக எண்: 3478 பக்கங்கள் 1-38
  • நூலக எண்: 3965 பக்கங்கள் 21-26
  • நூலக எண்: 4066 பக்கங்கள் 01-15
  • நூலக எண்: 963 பக்கங்கள் 29-36
  • நூலக எண்: 15219 பக்கங்கள் 31