ஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமதுர் றஹீம்
தந்தை துவான் தர்மா கிச்சிலான்
தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ
பிறப்பு 1945.01.15
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அமதுர் றஹீம் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ. 1963இல் ஆசிரியையான இவர் உப அதிபராகவும் உடற்கல்விப் போதனாசிரியராகவும் உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் முதன்மை மொழி தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும் (1978-1990) மதிப்பீட்டு பரீட்சகராகவும் பணியாற்றி 1990இல் ஓய்வு பெற்றார்.

1958இல் இவர் பள்ளி மாணவியாக இருக்கும்போது பாடசாலைச் சஞ்சிகையில் எழுத ஆரம்பித்தார். 1975 இல் முதல் வானொலி ஆக்கம் ஒலிபரப்பானது. இவர் பல சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், வானொலிப் பிரதிகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிக்குழந்தை என்பது இவரது கவிதைத் தொகுதி. 2009இல் இலங்கை அரசின் கலாபூசணம் விருது பெற்றார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 35-41